வியாழன், 30 டிசம்பர், 2010

டாலர் முதற்றே உலகு? (2)

"டாலரின் மதிப்பு
வீழ்ச்சியடைந்து விட்டதாலும்,
இதனால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கு
ஏற்பட்ட இழப்பையும் வைத்துப் பார்க்கும்போது,
அமெரிக்க டாலர் என்பது
நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.
எனவே, கச்சா எண்ணெய் ஆனது
டாலருக்கு பதிலாக யூரோ போன்ற
பல்வேறுபட்ட நாணய மதிப்பில்,
அவற்றுக்கு மாற்றீடாகத்தான்
விற்கப்பட வேண்டும்".

- குலாம்ஹுசைன் நொசாரி,
ஈரான் எண்ணெய்த்துறை அமைச்சர்
(2007, நவம்பரில் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் ஆற்றிய உரை)


ந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் டாலரிவல்தான் வருவாய் ஈட்டுகின்றன. உலகின் மிகப்பெரிய அன்னியச் செலாவணிக் கையிருப்பை வைத்திருக்கும் இந்த நாடுகள், டாலரின் மதிப்பு வீழ்ந்தபோது அன்னியச் செலாவணியில் கணிசமான அளவை இழந்துவிட்டன. இதற்கு இன்னொரு முகமும் உண்டு.

உலகத்திற்கு அமெரிக்கா தர வேண்டிய கடன் தொகை பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது. அமெரிக்கா எப்போதுமே திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு அது வளர்ந்து விட்டது; மேலும் வளர்ந்து வருகிறது. அமெரிக்காவின் தேசியக் கடன் 14 டிரில்லியன் டாலர்கள் ($13,879,785,000,000. அதாவது 14 லட்சம் கோடி டாலர்கள்- நவம்பர் 30, 2010 கணக்குப்படி. இது பற்றி மேலும் விவரம் அறிய இங்கே சொடுக்குங்கள்). ஆண்டு வட்டி மட்டும் 40 ஆயிரம் கோடி டாலர்களுக்கு மேல்.

அமெரிக்காவின் 'தேசியக் கடன்களில்' பாதி வெளி நாட்டவர்களிடம் பட்டுள்ள கடன்கள். (அமெரிக்காவின் வெளிநாட்டுக் கடன் என்பது தனி. அது 30, ஜூன் 2008 கணக்குப்படி 13.77 டிரில்லியன் டாலர்கள்). ஆனால், உலகிலேயே மிகுந்த பேறு பெற்ற நாடு அமெரிக்கா. எப்படி என்கிறீர்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக