அமைதிப் பூங்கா...
அமைதிப் பூங்கா...
ஏன் இந்த ஓலம்?
எதற்கிந்த பிதற்றல்?
நாய்களைத் தின்று
நாய்கள்
வெறி நாய்களாய்
பரிணமித்த தறுவாயில்
வெறி நாய்க் கடியுண்டவன்
தண்ணீரைக் கண்டு அலறுதலாய்
ஏன் இந்த ஓலம்?
செத்துப் போனவைகளுக்கான ஒப்பாரியா?
மானுடக் கிளையில்
மனிதப் பிரேதங்கள்
உள்ளீடற்ற
பிரேத மனிதர்களும்.
ரத்தமும், மதி மொத்தமும்
வெளியே சிதறிச் சிரிக்கும்.
எவனதோ ஆணையில்
உணர்வற்ற வீமசேனர்கள்
இரு கூறாய்க் கிழித்து
மாற்றியெறிந்த
சராசந்தனின்
ரத்தச் சுவட்டில்-
தலைப்பு மாறிய புற்கள்
உலக்கைகளாய் உதித்தெழ
யது குலம் செத்தொழியும்
தாயாதிச் சண்டையில்.
அதுவரை-
கலவரக் காடென்பதே பொருத்தம்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக